News March 27, 2025
கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
வேலூர்: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

வேலூர் விருபாட்சிபுரம் பெரியார் நகர் பாறை மேட்டை சேர்ந்தவர் சவுரி (23) இவரது மனைவி பிரீத்தி தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். மதுவுக்கு அடிமையான சவுரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த சவுரி ஆவேசத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த பாகாயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 19, 2025
JUSTIN: வேலூரில் 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,15,025 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 8,42,980 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
News December 19, 2025
வேலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <


