News March 27, 2025
கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 10, 2025
வேலூர்: 10th, 12th போதும், 14,967 காலியிடங்கள்!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் உதவியாளர், ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 14,967 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10/ 12th/ ஏதேனும் ஒரு டிகிரி/ முதுகலை பட்டம் படித்தவர்கள் <
News December 10, 2025
வேலூர்: கலெக்டர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (டிச.10) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அரசு அலுவலர்கள் மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துகொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன், துணை ஆட்சியர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News December 10, 2025
வேலூர்: எருது விடும் விழா ஆலோசனை கூட்டம்

2026 ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று(டிச.10) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


