News March 27, 2025
கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
வேலூர் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட வாரியாக 1 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை இரண்டாம் இடைப்பருவ தேர்வு நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கான அட்டவணையை ஏற்கனவே வேலூர் மாவட்ட கல்வி இயக்குனர் வெளியிட்டிருந்தார். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார், நிதி உதவி, அரசு பள்ளிகளில் இன்று தேர்வு நடைபெறும்.
News November 12, 2025
போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஐந்தாண்டு சிறை

வேலூர் மாவட்டம், கடந்த 2021 ஆம் ஆண்டு “போக்சோ” வழக்கில் திருமால் என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த வழக்கு நேற்று (11/11/2025) வேலூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு திருமால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூ. 25,000 அபராதமும் வழங்கப்பட்டது, அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News November 12, 2025
வேலூர்: 3 நாளாக காணாமல் போனவர் சடலமாக மீட்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சங்கர் (40) மூன்று நாட்களாக காணாமல் போயிருந்தார். தொடர்ந்து தேடிய காவல்துறையினர், நேற்று (நவ.11) சர்வே எண் 100 ஏரியில் அவரது சடலத்தை கண்டெடுத்தனர். தீயணைப்பு துறை உதவியுடன் உடல் மீட்கப்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.


