News March 27, 2025
கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு!

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 25) காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News November 25, 2025
வேலூர்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

வேலூர் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க. 1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 25, 2025
வேலூர்: திருமணத் தடை நீங்க இந்த கோயிலுக்கு போங்க!

வேலூர், பள்ளி கொண்டா பகுதியில் உள்ளது பள்ளி கொண்ட பெருமாள் கோயில். பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்திலிருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் அவரை முதன்முதலாக சயனிக்க வைத்தார் என்கிறது தலபுராணம். இந்த தலத்தில் திருமணம் செய்தால் தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக உள்ளது. திருமணம் தடைபட்டால் இந்த கோயிலுக்கு போய் வழிபட்டால் நல்லதே நடக்கும். ஷேர் பண்ணுங்க!


