News December 4, 2024

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

image

ஸ்ரீவி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(45). கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள தெருவில் நவ.28 ஆம் தேதி படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் (56) என்பவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்து ரூ.12 லட்சத்தை கைப்பற்றினர்.

Similar News

News December 2, 2025

ஆண்டாள்கோயில் ஊழியருக்கு கொலை மிரட்டல்

image

ஸ்ரீவி.,பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவர் ஆண்டாள் கோவிலில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். ஆண்டாள் கோயிலில் கார் பார்க்கிங் ஏலம் எடுத்துள்ள அலெக்ஸ்பாண்டி என்பவர் சரிவர பணம் செலுத்தாததால் கோயில் நிர்வாகம் சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. கர்ணனிடம் போன் செய்து அலெக்ஸ்பாண்டி தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளார். ஸ்ரீவி.நகர் போலீசார் அலெக்ஸ்பாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 2, 2025

விருதுநகரில் மாணவர்களுக்கான பேச்சு போட்டி

image

விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்றக் கூட்டரங்கில் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் டிச.4 மற்றும் டிச.5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.

News December 2, 2025

விருதுநகரில் மாணவர்களுக்கான பேச்சு போட்டி

image

விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்றக் கூட்டரங்கில் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் டிச.4 மற்றும் டிச.5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.

error: Content is protected !!