News May 10, 2024

கூலித் தொழிலாளியின் மகள் சாதனை!

image

எர்ணாவூர், எரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த சந்திரசேகர், வளர்மதி தம்பதியரின் மகள் ஸ்வேதா. திருவான்மியூரில் உள்ள தி பெசன்ட் தியாசா  பிக்கல் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இவர், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழில் 96, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 எடுத்துள்ளார். 

Similar News

News December 1, 2025

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

image

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நாளை (டிச.2) நடக்கவிருந்தது. இந்த நிலையில், ‘டிட்வா’ புயலின் காரணமாக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News December 1, 2025

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு

image

சென்னையில் இன்று (டிச.1) காலை முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி
நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். மேலும் சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார்.

News December 1, 2025

JUST IN: சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

‘டிட்வா’ புயல் காரணமாக நாளை (டிச.2) காலை 8 மணி வரை சென்னையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!