News April 12, 2025

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர அழைப்பு

image

கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 2024-25 ஆம் ஆண்டு 24-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டைய பயிற்சி திருச்சி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இதில் பயிற்சி பெற விரும்புவோர் <>அதிகாரப்பூர்வ இணையதளத்தில்<<>> ஏப்-16 முதல் மே-6 வரை விண்ணப்பிக்கலாம் என திருச்சி மண்டல இணை பதிவாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்ங்க..

Similar News

News October 30, 2025

திருச்சி: என்ஐடியில் இலவச சோலார் பயிற்சி முகாம்

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வரும் நவ.11 முதல் 19 ஆம் தேதி வரை 9 நாட்கள் இலவச சோலார் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், சூரிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் பற்றிய நடைமுறை அறிவு, பசுமை ஆற்றல் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 9789766155 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

திருச்சி: திருமணமான 3 மாதத்தில் தற்கொலை

image

சோமரசம்பேட்டை அடுத்த தாயனூர் கீழக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25), நாச்சிகுறிச்சியைச் சேர்ந்த ஹரிணி ஆகியோருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு, ஹரிணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News October 30, 2025

திருச்சி: கோயிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

திருச்சி, பச்சைபெருமாள்பட்டியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் நேற்றுமுன்தினம் புளியஞ்சோலை மாசி பெரியண்ணசாமி கோயிலுக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் தேடிச்சென்ற போது புளியஞ்சோலை அருகே உள்ள ஆற்றில் அவர் சடலமாக கிடந்தார். உடல் துறையூர் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!