News April 10, 2025
கூட்டுறவு பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 2024-2025 ம் ஆண்டிற்கான 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது விபரங்களுக்கு WWW.tncu.gov.tn.in என்ற இணையதளத்தின் மூலமும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் என்ற முகவரியிலோ 04286-290908, 9080838008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்
Similar News
News July 5, 2025
நாமக்கல்லில் பூர்வஜன்ம பாவம் நீக்கும் கோயில்!

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.
News July 5, 2025
வங்கியில் ரூ.85,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் சேலம், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். மேலும் தகவல் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News July 5, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

நாமக்கல் நகர் மையப்பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று ஆனி மாத சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேய பகவானுக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.