News August 2, 2024
கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்த டிராக்டர்கள்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை தொழில் முதலீட்டு நிறுவனங்களாக மாற்றும் திட்டத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான இரண்டு டிராக்டர்களை கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் கூட்டுறவு சங்க செயலாளரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Similar News
News July 8, 2025
நாகையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகநாத சுவாமி கோயிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை (ஜூலை.9) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News July 8, 2025
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; ஆட்சியர் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரும் ஜூலை 15ல் தொடங்கப்பட உள்ளது. இதில், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரையில் நாகை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் 97 முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் 15 துறையைச் சேர்ந்த 46 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
நாகையில் ஊராட்சிக்கு ரூ.1 கோடி பெற அழைப்பு!

நாகை மாவட்டத்தில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் கடைபிடிக்கும் ஊராட்சிக்கு விருது மற்றும் ரூ.1 கோடி தமிழக அரசால் அளிக்கப்பட உள்ளது. தகுதியான ஊராட்சிகள் உரிய ஆவணங்களுடன் நாகை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் பா. ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.