News April 14, 2025
கூடைப்பந்து பயிற்றுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து பயிற்றுநராக பயிற்சி வழங்குவதற்கு, தேசிய விளையாட்டு நிறுவனம் (அ) இந்திய விளையாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட முதுநிலை விளையாட்டு பயிற்சி சான்றிதழுடன் வருகின்ற 20.04.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல்.
Similar News
News November 2, 2025
சிவகங்கையில் இளைஞர் வெட்டி கொலை

சிவகங்கை அருகே மதுரை முக்கு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் ராஜேஷ் (21) என்பவர், நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று மர்ம நபர்கள் ராஜேஷை விரட்டியுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் பகுதியில் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News November 2, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 2, 2025
சிவகங்கை: கையில் வாளுடன் சுற்றிய மூவர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் காவல் உதவி நிலைய ஆய்வாளர் வைரமணி இன்று 1/11/25 மறவமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு மனோஜ்குமார் மூர்த்தி மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய மூன்று பேர் கையில் வாளுடன் சுற்றித்திரிந்தனர். அவர்களில் மூர்த்தி என்பவன் தப்பியோடிய நிலையில் மனோஜ்குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


