News January 22, 2025
கூடுதல் வாடகை: புகார் தெரிவிக்கலாம்

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா தலைமையில், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பெல்ட் வகை அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 எனவும், டயர் வகை எந்திரங்களுக்கு ரூ.1,800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது அப்பகுதி வேளாண் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
Similar News
News November 18, 2025
கடலூர்: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

விருத்தாசலம் காவனூர் மணிமுத்தாற்றில் இறந்த நிலையில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், அந்த சடலம் பெரியகோட்டு முளை சேர்ந்த மாற்றுத்திறனாளி கொளஞ்சிநாதன் (47) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்தவர், ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
கடலூர்: ஆற்றில் மிதந்து வந்த சடலம்

விருத்தாசலம் காவனூர் மணிமுத்தாற்றில் இறந்த நிலையில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரித்ததில், அந்த சடலம் பெரியகோட்டு முளை சேர்ந்த மாற்றுத்திறனாளி கொளஞ்சிநாதன் (47) என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 15-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்தவர், ஆற்றில் சடலமாக மிதந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
BREAKING: கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (நவம்பர் 18) கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியபடுத்துங்க…


