News January 22, 2025

கூடுதல் வாடகை: புகார் தெரிவிக்கலாம்

image

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா தலைமையில், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பெல்ட் வகை அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 எனவும், டயர் வகை எந்திரங்களுக்கு ரூ.1,800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது அப்பகுதி வேளாண் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Similar News

News December 9, 2025

கடலூர் மாவட்ட மக்கள் கவனத்திற்கு..

image

கடலூர் மாவட்டத்தில் SIR பணிகள் கடந்த நவ.4-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிச.11-ம் தேதியே SIR கீழ் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊருக்கு சென்று விண்ணப்பம் நிரப்ப இயலாத நபர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம். ஷேர்

News December 9, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

image

கடலுார் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் டிச.13-ம் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், வட்ட வழங்கல் பிரிவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், ரேஷன் கடை மற்றும் பொருட்கள் சார்ந்த குறைகள்/புகார்களை மக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்தியா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

News December 9, 2025

கடலூர்: நகை திருடிய தாய் – மகள் கைது

image

ராமநத்தம் காந்தி நகரைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவர் தன் வீட்டில் வைத்திருந்த 9 1/4 பவுன் தங்க நகையை காணவில்லை என ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சித்ராவின் வீட்டில் வாடகைக்கு இருந்த பவுனாம்பாள் (46), அவரது மகள் ஸ்வேதா (24) ஆகியோர் பீரோவை திறந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.

error: Content is protected !!