News October 23, 2024
கூடுதல் ரயில்கள் நிற்க வேண்டி விழுப்புரம் எம்பியிடம் மனு

திண்டிவனம் வட்டம் ரயில் உபயோகிப்பாளர் நல சங்கத்தின் சார்பில், ரயில் பயணிகளின் நலனுக்காக, கூடுதலாக ரயில்கள் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது உடனடியாக ரயில்வே துறைக்கு, எம்.பி ரவிக்குமார் பரிந்துரைத்து கடிதம் அனுப்பி வைத்தார்.
Similar News
News November 5, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
விழுப்புரம்: பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி!

விழுப்புரம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. விழுப்புரம் நகர திமுக அலுவலகம் மற்றும் காந்தி சிலை முன்பு திமுகவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். சைவ,வைனவ சர்ச்சை பேச்சால் இவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
News November 4, 2025
பனை விதைகளை நட்டு வைத்த ஆட்சியர் அப்துல் ரஹ்மான்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்குட்பட்ட அய்யங்கோயில்பட்டு ஊராட்சி முத்தாம்பாளையம் ஏரிக்கரையோரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.04) பனை விதைகளை நட்டு வைத்தார். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.வெங்கடேஷ்வரன், உதவி இயக்குநர் மஞ்சுளா ஆகியோர் கலந்து கொண்டனர்.


