News March 28, 2025

கூடலூரில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஆய்வு

image

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Similar News

News November 16, 2025

தேனியில் 15 பேர் சேர்ந்து பெண் மீது தாக்குதல்

image

பெரியகுளம், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவரது மனைவி மாலையம்மாள். இதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நவீன்குமார் இவரது நண்பர்கள் விஷ்ணு, ஜீவானந்தம் உட்பட 15 பேர் மாலையம்மாள் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் நவீன்குமார் உட்பட 15 பேர் வழக்கு (நவ.15) பதிவு.

News November 16, 2025

தேனி: சிறுவன் ஓட்டிய பைக் மோதி ஒருவர் படுகாயம்

image

சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ரபிக் (48). இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் சின்னமனூர் சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 14 வயது சிறுவன் ரபீக் பைக் மீது மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளார். இந்த விபத்தில் ரபீக் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு.

News November 16, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (15.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!