News March 28, 2025

கூடலூரில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஆய்வு

image

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Similar News

News December 10, 2025

தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE.

News December 10, 2025

தேனி: பெண் தூக்கிட்டு தற்கொலை

image

இராஜதானி அருகே சுந்தரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகு (44). இவருக்கு சற்று கண் குறைபாடு உள்ள நிலையில் அவரது சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கண் குறைபாடு காரணமாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த நாகு நேற்று (டிச.9) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 10, 2025

தேனி: வெந்நீரில் தவறி விழுந்து குழந்தை பலி!

image

கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தம்பதி ராஜேஷ்கண்ணன்- கீர்த்திகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். டிச.1 அன்று கீர்த்திகா, வெந்நீர் வைத்து விட்டு துணி எடுக்க சென்றபோது அங்கு 2வது மகள் பிரணிவிகா ஸ்ரீ வெந்நீரில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!