News April 11, 2025
கு.மு. அண்ணல் தங்கோவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஒப்பற்ற முன்னணி விடுதலைப் போராட்ட வீரர், தமிழறிஞர், தூயதமிழ்க்காவலர் கு.மு.அண்ணல் தங்கோவின் 122 வது பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்படுகின்றது. இதைமுன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் குடியாத்தம் நேரு பூங்காவில் நாளை (ஏப்ரல் 12 ) காலை 9 மணி அளவில் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
Similar News
News November 9, 2025
வேலூர்: போலி சான்றிதழ் அளித்து அரசு வேலை – 3 ஆண்டுகள் சிறை

ராணிப்பேட்டை சேர்ந்த விஜி (41). இவர் கடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இவரின் சான்றிதழ்கள் 2015-ம் ஆண்டு சரிபார்த்த போது, போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது. இந்த வழக்கின் விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரஞ்சிதா நேற்று (நவ.8) விஜிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.
News November 9, 2025
வேலூர்: லாரியில் மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி!

வேலூர்: அணைக்கட்டு தெள்ளை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் நேற்று (நவ.8) லாரியின் கேபின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது கணியம்பாடி அருகே சென்ற போது உயர் அழுத்த மின்சார கம்பி உரசி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
News November 9, 2025
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


