News January 23, 2025
குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Similar News
News January 3, 2026
புதுகை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

நாளை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதுகை திருக்கோகர்ணம் அருகிலுள்ள பள்ளத்திவயல் பகுதியில் பாஜக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை (ஜன.4) மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருப்பதையொட்டி நாளை ஒருநாள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ‘ட்ரோன்கள்’ பறக்க தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மு. அருணா உத்தரவிட்டுள்ளார்.
News January 3, 2026
புதுகை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 3, 2026
புதுகை: தவறி விழுந்த மாணவன் பரிதாப பலி!

பொன்னமராவதி அடுத்த காரையூரை சேர்ந்தவர் சுதர்சன்(21). இவர் (டி.29) அன்று காரையூர் அடுத்த காரவயல் வயல் பகுதியில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏரியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


