News January 23, 2025

குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Similar News

News December 1, 2025

புதுக்கோட்டை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News December 1, 2025

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் விபத்தில் பலி!

image

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக பொருளாளர் மற்றும் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வி.சி இராமையா. இவர் இன்று வாண்டா கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதி பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அதிமுகவினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

News December 1, 2025

புதுக்கோட்டை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முதலமைச்சர் தாயுமானவர் திட்டத்தின் வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்கள் இல்லத்திற்கே சென்று, அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் (02.12.2025) மற்றும் (03.12.2025) ஆகிய தேதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!