News January 23, 2025
குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Similar News
News January 9, 2026
புதுக்கோட்டை: பொங்கல் பரிசு – புகார் எண் அறிவித்த கலெக்டர்

புதுகையில் பொங்கல் பரிசு பெறுவதில் பிரச்னை ஏற்பட்டால் புகாரளிக்க எண்கள் வெளிடப்பட்டுள்ளது. தனி வட்டாட்சியாளர் 9445000312, ஆலங்குடி 9445000313, குளத்தூர் 9445000314, கந்தர்வகோட்டை 9445000315, திருமயம் 9445000316, அறந்தாங்கி 9445000317, ஆவுடையார் கோவில் 9445000318, இலுப்பூர் 9445000319, மணமேல்குடி 9445000320, பொன்னமராவதி 9445000404, கரம்பக்குடி 9445000405, விராலிமலை 9080487553. இதனை SHARE பண்ணுங்க!
News January 9, 2026
புதுக்கோட்டை: நூதன முறையில் மோசடி – 2 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரிம் பணம் கொடுத்தால், நகையை அடமானம் வைத்து அசல், வட்டியைத் தருவதாகக் கூறி, போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரூ.1.35 லட்சத்தை மோசடி செய்துள்ளார். இதை நம்பி பணத்தைக் கொடுத்த சீனிவாசன் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்து அவரளித்த புகாரின் படி, தஞ்சாவூர் மாவட்ட போலீசார் திருநெல்வேலி சேர்ந்த சக்திவிஜய், மகாராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News January 9, 2026
புதுக்கோட்டை: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

கந்தர்வகோட்டையில் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மின்மாற்றியில் உள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் தொடர்ந்து திருடி வந்தனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் விவசாயிகள் புகரளித்தனர். இதில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தஞ்சாவூரை சேர்த்த மணிகண்டன்(24), தங்கமணி(24) ஆகியோர் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின் 2 பேரையும் கைது செய்த போலீசார் 300 கிலோ காப்பரை பறிமுதல் செய்தனர்.


