News April 2, 2025
குழந்தை வரம் தரும் பெரிய பெருமாள் கோயில்

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Similar News
News December 19, 2025
கள்ளக்குறிச்சி: வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி!

கள்ளக்குறிச்சி: வரதப்பனுார் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ரங்கம்மாள் (35). இவர், நேற்று தனது நிலத்தில் மேய்ச்சலுக்காக 8 ஆடுகளை கட்டிவிட்டு சென்றார். அப்போது திடீரென வந்த 3 வெறி நாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில் 7 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 1 ஆடு படுகாயம் அடைந்தது. இதனால் மனமுடைந்த ரங்கம்மாள், அரசு சார்பில் நிவாரணத்தொகை வழங்க வேண்டுமென ரங்கம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சியில் துணிகரம் – பூட்டிய வீட்டில் 4 பவுன் கொள்ளை!

கள்ளக்குறிச்சி: புக்குளத்தைச் சேர்ந்த கார்த்திகா (33), தனது வீட்டை பூட்டிவிட்டு, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
கள்ளக்குறிச்சியில் மின்தடை – இதுல உங்க ஏரியா இருக்கா?

திருக்கோயிலூர் மற்றும் ஆலத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை – டிச.20 பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. அதனை முன்னிட்டு, குலதீபமங்கலம், கொளப்பாக்கம், வேலாகுளம், அத்திப்பாக்கம், நெடுங்கம்பட்டு, ஆலத்துார், திருக்கணங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானுார், ரங்கநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


