News May 12, 2024

குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

விருதுநகர் இருப்பு பாதை காவல் நிலைய காவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையங்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகர் காந்தி சிலை முன்பு துவங்கிய இந்த ஊர்வலம் ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது. பின்னர் நடைமேடையில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரயில்வே காவல்துறையினர் வழங்கினர்.

Similar News

News April 20, 2025

விருதுநகர்: திரைப்படங்கள் காண ஆட்சியர் அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி,ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

News April 20, 2025

விருதுநகர்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

image

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. விருதுநகர் மாவட்டத்தில் 72 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News April 19, 2025

விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரடியாக தெரிவித்து பயனடையலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!