News May 14, 2024

குழந்தை திருமணம் செய்தால் கடும் தண்டனை

image

குழந்தை திருமணச் சட்டம் 2006 இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். 18 வயதுக்குட்பட்ட குழந்தையை 18 வயதிற்கு மேற்பட்டவர் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் குற்றவாளி ஆவார். குழந்தை திருமணம் நடந்தால் அதை ஏற்பாடு செய்தவர்கள், கலந்து கொண்ட அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவர். எனவே குழந்தை திருமணம் நடைபெற்றால் அதனை உடனடியாக 1098 என்ற எண்ணிற்கு தெரிவிக்கவும்.

Similar News

News April 20, 2025

அரியலூர்: 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள Digital Marketing Manager பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 – 25,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ள 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்…

News April 20, 2025

காட்டுப்பன்றிகள் மோதல்: ஒருவர் படுகாயம்

image

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்(54). இவர் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு தனது பைக்கில் சத்திரம் கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 காட்டுப்பன்றிகள் ஓடி வந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய கண்ணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.

News April 19, 2025

மணிமேகலை விருது மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கும்,கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பகுதி கூட்டமைப்புகள் மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது என மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!