News March 18, 2025

குழந்தை திருமணம் – கலெக்டர் எச்சரிக்கை

image

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் தொடர்புடையவர்களுக்கு இரண்டு வருடம் சிறை தண்டனையும், ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை பள்ளி, கல்லூரி, கிராம சபை கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 19, 2025

கணவன் உயிரிழப்பு- மனைவிக்கு சிகிச்சை

image

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ஜான் என்கிற சாணக்கியன்- ஆதிரா தம்பதி தங்களது காரில் திருப்பூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த கும்பல், தம்பதியைக் கொடூரமாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே கணவர் ஜான் உயிரிழந்தார். மனைவி ஆதிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News March 19, 2025

நம்ம ஊரு திருவிழாவில் நாளை கடைசி நாள்

image

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம் நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு சேலம் மாவட்டத்தில் வரும் 22, 23-ந் தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவிலான தேர்வில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் www.artandculture.tn.gov.in மூலம் நாளை (வியாழக்கிழமை) மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2025

ஆர்ப்பாட்டம் நடத்த 5 நாட்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்

image

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போன்றவற்றை நடத்துவதற்கு, சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனுமதி பெற்ற பிறகே நடத்த வேண்டும். குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன் விண்ணப்பித்து, அனுமதி பெற வேண்டும். இந்த உத்தரவு 19ம் தேதி (இன்று) நள்ளிரவு முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என சேலம் மாநகர ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!