News May 15, 2024

குழந்தை தத்து அளிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது

image

ஆரணி பேருந்து நிலையத்தில் 29.5.2023 அன்று தனியாக அழுது கொண்டிருந்த யாழினி என்ற 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவில் தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை உரிமம் கோருவார் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் ஏழு நாளுக்குள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 16, 2025

தி.மலை: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2025

தி.மலை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

தி.மலை மாவட்ட காவல்துறை சார்பில், போலி விளம்பர மோசடிகள் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில் விழிப்புணர்வு வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என இதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பண மோசடி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கலாம் (அ) www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளது. (SHARE)

News September 16, 2025

தி.மலை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் இன்று (செப்.,16) ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரிய வையுங்கள்!

error: Content is protected !!