News April 23, 2025
குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு 3 தளங்கள் – ரூ.20 கோடி ஒதுக்கீடு

குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் 3 தளங்களுடன், அதிநவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு ரூ. 20 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தில் தனித்துவம் மிக்க குழந்தைகள் சிகிச்சைப் பிரிவாக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் குழந்தைகளுக்கான அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News November 23, 2025
மதுரை: அரசு மருத்துவமனை-ல பிரச்சனையா..!

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா மதுரை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0452-2640778 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News November 23, 2025
மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களிடம் மோசடி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று வந்த ஆந்திர பக்தர்கள் 39 பேரிடம், தன்னை கைடு என அறிமுகப்படுத்திக் கொண்ட மூவர் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்து செல்வதாக கூறி தலா ரூ.250 பெற்று ஏமாற்றி உள்ளனர். ரூ.50 கட்டணத்திற்கு அதிக பணம் வாங்கியது அறிந்த பக்தர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் வெங்கடேஷ், அம்மையப்பன், கணேசன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி கைது செய்தனர்.
News November 22, 2025
மதுரை: எகிறும் மல்லிகை விலை; இரட்டிப்பாக உயர்வு

மதுரை மல்லி கிலோ ரூ.2800, பிச்சி ரூ.1500, முல்லை ரூ.1500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.150, செண்டு மல்லி ரூ.80, கனகாம்பரம் ரூ.800, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.150, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1டன் வரத்து உள்ளது பனியின் காரணமாக மல்லிகை விளைச்சல் மிகக் குறைவாக உள்ளதால் விலையும் சற்று அதிகம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


