News April 23, 2025
குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு 3 தளங்கள் – ரூ.20 கோடி ஒதுக்கீடு

குழந்தை சிகிச்சைப் பிரிவுக்கு மேலும் 3 தளங்களுடன், அதிநவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்படவுள்ளது. இதற்காக அரசு ரூ. 20 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. இதன் மூலம் தென் தமிழகத்தில் தனித்துவம் மிக்க குழந்தைகள் சிகிச்சைப் பிரிவாக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும் குழந்தைகளுக்கான அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News November 25, 2025
மதுரை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
News November 25, 2025
மதுரை: ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த இளைஞர்

திருமங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த அமாவாசை மகன்
ஜெயபாண்டி(33). இவர் காலை வழக்கம் போல்
வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியவர் திருமங்கலம் ரயில் நிலையம் சென்று, நாகர்கோவிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


