News April 2, 2025

குழந்தையாக பிறகும் பாலசுப்பிரமணியர்

image

திருவண்ணாமலை மாவட்டம், மண்மலை என்னும் ஊரில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு முருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 9, 2026

வந்தவாசி: நம்பி வந்த தோழியை சீரழித்த நண்பர்கள்!

image

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தனியாக வசித்த 25 வயது பெண்ணுக்கு, உதவி செய்வது போல் ஆசை காட்டி முகமது அலி, இம்ரான் உள்ளிட்ட நால்வர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் ஐந்து மாத கர்ப்பமான அப்பெண் அளித்த புகாரின் பேரில், நான்கு பேரையும் வந்தவாசி போலீசார் கைது செய்தனர். வறுமையைச் சாதகமாக்கி இழைக்கப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2026

தி.மலையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

image

ஆரணி அருகே தச்சூரில் கூலித் தொழிலாளி ரகுநாத்தின் மனைவி பிரியதர்ஷினி, இவர்களுக்கு 2வது குழந்தை பிறந்து 15 நாட்களே ஆகிறது. இந்நிலையில் பிரியதர்ஷினி குழந்தைக்கு பால் புகட்டிவிட்டு தூங்க வைத்துள்ளார். சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோது, குழந்தையின் மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்துள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 9, 2026

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!