News April 5, 2025
குழந்தைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தவோ 18 வயது வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான பணியில் அமர்த்தவோ கூடாது என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 20,000 முதல் 50,000 வரை அபராதம் விதிக்கப்படுவது உடன், 6 மாத முதல் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனைக்கும் வாய்ப்புள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
திருச்செந்தூர் கோவில் மண்டபத்தில் தீ விபத்து.!

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் மண்டபத்தில், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. மின் இணைப்புப் பெட்டி, வயர்கள் எரிந்து சேதமானது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். கோயில் அதிகாரிகள், போலீசார் விரைந்து செயல்பட்டு மின்சாரத்தை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
News December 8, 2025
தூத்துக்குடி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News December 8, 2025
தூத்துக்குடி: சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.!

கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சுற்றுலா வேனில் 22 பேர் பயணம் மேற்கொண்டனர். வேன் மதுரை – தூத்துக்குடி சாலையில் எட்டயபுரம் ராசப்பட்டி விலக்கு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


