News March 20, 2025

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பதவியேற்பு

image

புதுச்சேரி அரசு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவரும் பாண்டி வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியருமான சிவா முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சட்டசபையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் முதலமைச்சர் அமைச்சர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News

News March 21, 2025

நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும்

image

புதுச்சேரி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

News March 21, 2025

சாக்கடை சுத்தம் செய்ய ரூ.140 கோடியில் நவீன இயந்திரங்கள் 

image

புதுச்சேரி முழுவதும் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை மனிதர்கள் இன்றி நவீன இயந்திரம் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை. நகர பகுதியில் Smart city திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுகிறது.‌ இது முழு வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி முழுவதும் 140 கோடி ரூபாய் செலவில் இதே முறையில் சுத்தம் செய்ய நடவடிக்கை என அமைச்சர் லட்சுமி நாராயணன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

News March 21, 2025

புதுச்சேரி அரசு சார்பில் 20 லிட்டர் தண்ணீர் இலவசம்

image

புதுவையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், ”புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் ஏழைகளுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும். மேலும் விரிவான குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். அதுவரை இந்த இலவச 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!