News April 2, 2025
குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
நெல்லை – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

இன்று காலை 10.05 மணிக்கு செங்கோட்டையில் புறப்படும் 56742 செங்கோட்டை – நெல்லை மதியம் 01.40 க்கு நெல்லையில் புறப்படும் 56743 நெல்லை – செங்கோட்டை ரயில்கள் இன்றும் (22.10.25,) நாளையும் (23.10.25) சேரன்மகாதேவி – நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் சேரன்மகாதேவி வரை மட்டுமே இயங்கும்.
News October 22, 2025
நெல்லை: பைக் மோதி ஒருவர் பலி

விக்கிரமசிங்கபுரம் தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் சக்தி வடிவேல் (57) மரக்கறி கடை நடத்தி வந்தார். கடந்த 16 ம் தேதி இரவு விக்கிரமசிங்கபுரம் சந்தனமாரியம்மன்கோயில் அருகில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த ரோட்டில் பைக்கில் வந்த ஒருவர் சக்தி வடிவேல் மீது மோதியதில் பலத்த காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
News October 22, 2025
நெல்லை : EB இலவச சலுகை தெரியுமா உங்களுக்கு ??

நெல்லை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <