News April 2, 2025
குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 25, 2025
நெல்லை: மக்களுக்கு SMS மூலம் வார்னிங்

நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான வெள்ள நீர் திறக்கப்படுவதல் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றில் இறங்குவதை தவிர்க்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு மையத்தின் மூலம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நேற்று முதலே SMS அனுப்பப்பட்டது.
News November 25, 2025
நெல்லை: மக்களே மக்கள் கவனமாக இருங்க.. அறிவுறுதல்!

நெல்லை மாவட்டத்தில் ராமநதி ஆற்றில் 84 அடி உச்சநீர்மட்டம் உள்ள அணை 82 அடியை எட்டியதால் அணைக்கு வரும் 200 கன அடி தண்ணீர் அப்படியே வழிந்தோடி வெளியேற்றப்பட்டது. இதனால் பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், அடைச்சாணி, திருப்புடைமருதூர் மற்றும் முக்கூடல் உள்ளிட்ட இடங்களில் ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
News November 25, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.24] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


