News August 24, 2024
குளத்தில் குதித்த வன்கொடுமை குற்றவாளி பிணமாக மீட்பு!

அசாமின் நகோனில் குற்ற சம்பவ இடத்திற்கு அழைத்து செல்லப்பட்ட முக்கிய குற்றவாளி தபாஸுல் உயிரிழந்துள்ளார். வன்கொடுமைக்கு உள்ளான 14 வயது சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.அவர்களில் தபாஸுலை அங்கு அழைத்து சென்றபோது, அவர் கைவிலங்குடன் தப்பியோடி அருகே உள்ள குளத்தில் குதித்தார். அவரை விடியும்வரை தேடிய போலீசார் தீவிர தேடுதலுக்குப் பிறகு இன்று பிணமாக கண்டெடுத்தனர்.
Similar News
News November 22, 2025
குறுக்கே நிற்கும் PAK.. இந்தியா – ஆப்கன் எடுத்த முடிவு

இந்தியாவும், ஆப்கனும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. ஆனால், போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அடிக்கடி சாலைகளை மூடுவதால், கடல் மற்றும் வான்வழியாக வர்த்தகத்தை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாகவும், டெல்லி, அமிர்தரஸிலிருந்து காபூலுக்கு 2 சிறப்பு சரக்கு விமானங்கள் மூலமும் வர்த்தகம் செய்ய உள்ளதாக இருநாடுகளும் அறிவித்துள்ளன.
News November 22, 2025
பஞ்சாங்கத்தை மாற்றக்கூடியவர் CM: சேகர் பாபு

<<18347216>>பஞ்சாங்கப்படி<<>> எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, பஞ்சாங்கத்தையே மாற்றக்கூடிய மதிநுட்பம் கொண்டவர் CM ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார். 2021-ல் இதே பாஜக, ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, ஆட்சியமைக்க மாட்டார் என்று சொன்னதாக குறிப்பிட்ட அவர், அப்போதிருந்தே அவர்களுக்கு CM தோல்வியையே பரிசாக அளித்து வருவதாக கூறினார்.
News November 22, 2025
மறைந்தார் பன்முக வித்தகர் ஈரோடு தமிழன்பன்

மறைந்த <<18358061>>ஈரோடு தமிழன்பன்<<>> திரைத்துறையிலும் பணியாற்றி இருக்கிறார். 1984-ல் ’அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் ’கரிசல் தரிசு’ & ’கையில காசு’ ஆகிய 2 பாடல்களை எழுதியிருக்கிறார். அத்துடன், ’நீயும் நானும்’ படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். இயக்கத்திலும் ஆர்வம் இருந்ததால், 1983-ல் ’வசந்தத்தில் வானவில்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அப்படம் ரோம் திரைப்பட விழாவில் விருது வென்றது.


