News August 16, 2024
குற்றாலத்தில் ‘சாரல் திருவிழா’ இன்று தொடக்கம்

குற்றால ‘சாரல் திருவிழா’ இன்று(ஆக.,16) தொடங்கி 4 நாள் நடைபெறுகிறது. விழாவில் முதலாவதாக, ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் காலை 10 மணிக்கு மலர் கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, கலைவாணா் அரங்கில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகிக்கிறார். எம்.பி.க்கள் துரை வைகோ, ராணி ஸ்ரீகுமாா், பழனிநாடாா் எம்எல்ஏ முன்னிலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Similar News
News December 6, 2025
தென்காசி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 6, 2025
டிச.13ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 13.12.2025 அன்று புளியங்குடி S.வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்வி தகுதிகள் கொண்ட 10000-க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளன. கூகுள் படிவம்: https://forms.gle/5Kzi9zpDTa7Mi9jc6
News December 6, 2025
தென்காசி: என் சாவுக்கு காரணம்., இளம்பெண் கடிதம்!

சிவகிரியை சேர்ந்தவர் பிரகாஷ் மனைவி பொன் ஆனந்தி (26). கடையநல்லூர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பொன் ஆனந்தி, ஆன்லைன் விளையாட்டில் ரூ.63 ஆயிரம் இழந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘ என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ என அவர் கடிதம் எழுதியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


