News August 9, 2024

குற்றவாளிகள் மீது தொடர் கண்காணிப்பு அவசியம்

image

தேனி மாவட்டத்தில் கஞ்சா, கஞ்சா மாத்திரை, போதை ஊசி ஆகியவற்றை மாணவர்களிடம் விற்பனை செய்வோர், தொடர் திருட்டு, ரவுடிகள், கூலிப்படையாக செயல்பட்டு கொலை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 300க்கு மேற்பட்டோர் உள்ளனர். இவர்களின் குற்ற சரித்திர கையேடுகள் அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தொடர் நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என தேனி எஸ்.பி. சிவபிரசாத் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 26, 2025

தேனி: பூச்சியால் பறிபோன உயிர்

image

தேனி, ஜங்கால்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்வதி (65). இவர் நேற்று முன்தினம் இரவு கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது விஷ பூச்சி ஒன்று அவரது கைவிரலில் கடித்தது. அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பார்வதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு (அக்25) பதிவு செய்து விசாரணை.

News October 26, 2025

தேனி: போலீஸ் ஸ்டேஷன் முன்னே கொலை மிரட்டல்

image

தேனி சிவாஜிநகர் ஜெயசுதா 45. இவரது மருமகன் தினேஷ்பாண்டிக்கும் மகளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகார் தொடர்பான விசாரணைக்கு வந்த ஜெயசுதாவை, மருமகன் தினேஷ்பாண்டி, அவருடன் வந்த திவ்யா, பால்பாண்டி ஆகியோர் போலீஸ் ஸ்டேஷன் முன் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். ஜெயசுதா புகாரில், தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 25, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

image

தேனி மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அக்.29 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறும் உள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு மனுக்கள் வழங்கி தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!