News March 23, 2025
குறைவில்லா வாழ்வைத் தந்தருளும் குமரகோட்டம் முருகன்

கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குமரகோட்டம் முருகன் கோயில். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேற்றப்பட்டது. பொதுவாக பெருமாளுக்குத் தான் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பதைப் பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்து தலை நாகம் குடைபிடித்த படி இருப்பதை காணலாம். திருமணத்தடை நீங்க மற்றும் நாக தோஷம் விலக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 14, 2025
காஞ்சி: நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிகழும் அதிசயம்

ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம், மதுரமங்கலத்தில், பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கமலவல்லி தாயார் சமேத வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. இது, எம்பார் சுவாமி அவதார தலமாகும். கண்ணில் குறை பாடு உள்ளோர், இந்தக் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், கண் சம்பந்தமான நோய்கள் குணமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தினமும் காலை 7 மணி- இரவு 8 மணிவரை நடை திறந்திருக்கும். ஷேர் பண்ணுங்க.
News September 14, 2025
காஞ்சி: BE/ B.Tech, B.Sc/M.Sc, CA படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News September 14, 2025
காஞ்சிபுரம்: வேன் மோதி பெண் பலி

வண்டலூர்-வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் படப்பை அருகே செரப்பணஞ்சேரியில் சாலையை கடந்த அடையாளம் தெரியாத 45வயது மதிக்கத்தக்க பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் அந்தபெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மணிமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.