News March 26, 2025
குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News December 5, 2025
திருவள்ளூர்: மின்சாரம் பாய்ந்து லாரி எரிந்து இளைஞர் பலி!

அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் இன்று காலை (டிச-5) சரக்கு பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி அப்பகுதியில் உள்ள மின் கம்பி மீது உரசியதில் லாரி தீப்பிடித்து எரிந்தது. மின் உரசியது தெரியாமல் சாலையில் சென்ற நபர் லாரியை தொட்டதும் அவருக்கும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். தகவல் அறிந்து தீயணைப்புத்துறை தீயை அனைத்தனர் மற்றும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 5, 2025
திருவள்ளூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
திருவள்ளூர்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <


