News March 26, 2025

குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News December 12, 2025

திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

News December 12, 2025

திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.

News December 12, 2025

திருவள்ளூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

திருவள்ளூர்: மூலக்கடையில் 15 வயது சிறுமி, நேற்று (டிச.11) புழல் பகுதி உறவினர் வீடு சென்று தன் வீடு செல்ல புழலில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த லாரி மூலக்கடை செல்வதாக டிரைவர் கூறவே நம்பி சிறுமி லாரியில் ஏறினார். சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி சிறுமியை லாரியில் அந்த டிரைவர் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!