News March 26, 2025

குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News October 20, 2025

திருவள்ளூர்: ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (20.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்காக மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரகாலங்களில் அருகிலுள்ள காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளலாம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News October 20, 2025

ஆரணி: பச்சிளம் குழந்தை மீட்பு

image

திருவள்ளூர், ஆரணி ஆற்றங்கரையில் உள்ள முட்புதரில் இன்று காலை பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்ட அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை முட்புதரில் வீசியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 20, 2025

திருவள்ளூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

திருவள்ளூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!