News March 26, 2025

குறைதீர் கூட்டத்தில் 736 மனுக்கள் பெறப்பட்டன

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், நிலம் சம்பந்தமாக 235, வேலைவாய்ப்பு சம்பந்தமாக 94, சமூக பாதுகாப்பு திட்டம் சம்பந்தமாக 108, அடிப்படை வசதிகள் வேண்டி 153 என மொத்தம் 736 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை தாங்கி, மனுக்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News December 13, 2025

ஆவடி: இன்றைய ரோந்து காவலர்களின் எண்கள்!

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் இன்று (13.12.2025) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தீவிர இரவு ரோந்து நடைபெற உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் ரோந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவசர சூழ்நிலையில் தொடர்பு கொள்ள காவல் துறை வெளியிட்ட ரோந்து எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

திருவள்ளூர்: தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்காக நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று (டிச.13) நடத்தப்பட்டது. முகாமில் பணியாளர்களின் உடல்நிலை பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட அடிப்படை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. திருவள்ளூர் நகராட்சி துப்புரவு அலுவலர் மோகன் முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை ஊக்குவித்தார்.

News December 13, 2025

திருவள்ளூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!