News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

சென்னை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News November 27, 2025

சென்னையில் கிடுகிடுவென உயர்வு!

image

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை தொடர்ந்துஉயர்ந்துள்ளது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளதாக
வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேட்டில் ஒருகிலோ தக்காளி மொத்த விற்பனையில் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார். உங்க ஏரியால விலை எவ்வளவு கமெண்ட்ல சொல்லுங்க.

News November 27, 2025

சென்னை: முதலிரவில் தாம்பத்யம் போது தகராறு- மாப்பிளை கைது!

image

புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அகஸ்டின் ஜோஷ்வா(33). இவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த, 24 வயது பெண்ணுக்கும், இரு நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கணவர் வீட்டில் முதலிரவு நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அறைக்குள், தாம்பத்யம் சம்பந்தமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜோஷ்வா, மனைவியை தாக்கியுள்ளார்.புகாரின் பேரில் போலீசார் ஜோஷ்வாவை நேற்று கைது செய்தனர்.

News November 27, 2025

சென்னை: போதை ஊசி உபயோகித்த வாலிபர்கள் கவலைக்கிடம்

image

கொடுங்கையூரைச் சேர்ந்தவர் பிரசன்ன குமார் (19) இவருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், அவரது நண்பர்களான சஞ்சய், சரவணன் ஆகியோர், வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திய போது, உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!