News April 27, 2025
குறுவை சாகுபடிக்கு தேவையான விதை உரங்கள் இருப்பு: ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 39 ஆயிரத்து 208 எக்டேர் பரப்பளவு சாகுபடி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு மொத்த விதை தேவை 1250 டன். தற்போது வரை 204 டன் குறுகிய கால நெல் ரகங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 241 டன் விதைகள் மற்றும் உரங்களும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
மயிலாடுதுறை: B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
மயிலாடுதுறை: போக்ஸோ வழக்கில் ஆசிரியர் கைது

மயிலாடுதுறை சித்தர்காட்டை சேர்ந்த சாம்சங் பிரபாகரன்(54) மயிலாடுதுறை அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்த 14வயது மாற்றுத்திறனாளி மாணவி 5மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதில் இதற்கு கரணம் உடற்கல்வி ஆசிரியர் என தெரியவர போலிசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
News November 3, 2025
மணல்மேடு அருகே முதியவர் தற்கொலை

மணல்மேடு அருகே இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆசை தம்பி (65) இவர் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.


