News September 14, 2024
குரூப்-2 தேர்வு; தந்தை மகள் ஒரே தேர்வு மையத்தில்

திருச்சி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை இன்று பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மையத்தில் தந்தை இளங்கோவனம் மற்றும் மகள் மதுபாலா ஆகியோர் ஒன்றாக தேர்வு எழுதுகின்றனர். மேலும் இளங்கோவன் 118 முறை குரூப்-2 தேர்வில் பங்கேற்றுள்ளதும், இளங்கோவன் தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
திருச்சி: அரசு பஸ் – கார் மீது மோதி விபத்து

மணப்பாறையில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து வடசேரி பிரிவு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 6, 2025
திருச்சி: BE படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் மற்றும் இதர பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,569
3. வயது: 18 – 33
4. மாதசம்பளம்: ரூ.35,400
5. படிப்பு: BE , டிப்ளமோ, டிகிரி
6.கடைசி தேதி: 10.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 6, 2025
திருச்சியில் சிறப்பு முகாம் அறிவிப்பு

திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண்பதற்காக வரும் 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை, திருச்சி நீதிமன்றத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு 0431-2460125 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என மாவட்ட தலைமை நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.


