News September 14, 2024
குரூப்-2 தேர்வு; தந்தை மகள் ஒரே தேர்வு மையத்தில்

திருச்சி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை இன்று பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மையத்தில் தந்தை இளங்கோவனம் மற்றும் மகள் மதுபாலா ஆகியோர் ஒன்றாக தேர்வு எழுதுகின்றனர். மேலும் இளங்கோவன் 118 முறை குரூப்-2 தேர்வில் பங்கேற்றுள்ளதும், இளங்கோவன் தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 25, 2025
திருச்சி: வாலிபர் எடுத்த விபரீத முடிவு

துவாக்குடி அருகே அசூர் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று மரக்கிளையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 25, 2025
திருச்சி: கல்விக்கடன் முகாமில் ரூ.7.35 கோடி கடன் வழங்கல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் மருத்துவம், பிசியோதெரபி, பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட கல்லூரிகளில் பயின்று வரும் 109 மாணவர்களுக்கு, பல்வேறு வங்கிகளின் சார்பில் ரூ.7.35 கோடி மதிப்பிலான கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
திருச்சி: மாவட்ட வருவாய் அலுவலர் இடமாற்றம்

தமிழக அரசு இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் வருவாய் அலுவலராக பணிபுரிந்த ராஜலக்ஷ்மி, சிறப்பு நில எடுப்பு வருவாய் அலுவலர் ( நெடுஞ்சாலை துறை ) ஆக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக ஆர் பாலாஜி திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பதவியேற்க உள்ளார்.


