News April 28, 2025
குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
தருமபுரியில் 2026 தேர்தல் வாக்காளர் திருத்தம் தொடக்கம்

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 11.12.2025 முதல் 27.12.2025 வரை பதிவுகள் பெறப்படும். மேலும், இறந்தோர், இடம்பெயர்ந்தோர், இரட்டை பதிவு, பட்டியல் வெளியிடப்பட்டு திருத்தங்கள் செய்யப்படும். பின், 12.85 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படும். என இன்று (டிச.04) அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
தருமபுரியில் 8 பவுன் நகையை மீட்ட காவலர்!

சேலத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வி நாகர்கோவிலில் இருந்து சேலம் – மும்பை ரயிலில் சேலத்துக்கு வந்தார், செவ்வாய்க்கிழமை சேலம் வந்ததும் தமிழ்ச்செல்வி ரயிலைவிட்டு இறங்கியுள்ளார். அப்போது ரயிலில் 8 பவுன் நகை & 3000 பணப்பையை ரயிலில் தவற விட்டுள்ளார். பின், சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில், தருமபுரி உதவி ஆய்வாளர் ரமேஷ், நகை & பணத்தை மீட்டு நேற்று (டிச.3) தமிழ்செல்வியிடம் ஒப்படைத்தார்.
News December 4, 2025
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <


