News March 28, 2024
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை.

தில்லைவிளாகம் சிவகாமி அம்மன் உடனுறை நடராஜா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று. இதில் சுமாா் 102 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து கும்பாபிஷேகம் நாளை (மாா்ச்.29) நடைபெற உள்ளது. இதையொட்டி கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது.
Similar News
News November 28, 2025
திருவாரூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது திருவாரூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (நவ.28) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழையும் நாளை கனமழையும் கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
திருவாரூர்: புயல் அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், திருவாரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!


