News August 24, 2024

கும்பகோணத்தில் போலி மதுபான கூடம்

image

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹிம் (46) என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு போலி மதுபானம் உற்பத்தி செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கும்பகோணம் மது விலக்கு மற்றும் ஆய தீர்வைத் துறை சேர்ந்த போலீஸார் அதிரடி சோதனை செய்தனர். இதில் சையது இப்ராஹிம் மற்றும் போலி மதுபானம் வாங்க வந்த 2 பேர் உள்பட மூன்று பேரை கைது செய்தனர்.

Similar News

News July 9, 2025

குறுவை சாகுபடிக்காக 23,784 டன் உரம் கையிருப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 95,000 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்களான யூரியா 9,996 டன், டிஏபி 2,685 டன், பொட்டாஷ் 3,468 டன், காம்ப்ளக்ஸ் 6,094 டன், சூப்பர் பாஸ்பேட் 1,541 டன் என 23,784 டன் உரங்கள் இருப்புள்ளது மேலும் தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை சாகுபடிக்காக 1,227 டன் யூரியா உரம் வந்துள்ளது.

News July 9, 2025

தஞ்சை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 1/2

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003305>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.

News July 9, 2025

தஞ்சை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!