News April 26, 2025
குமரி விவசாயிகளுக்கு 1.25 லட்சம் மல்பரி நாற்றுகள் விநியோகம்

குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 1.25 லட்சம் மல்பரி நாற்று உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மாநிலத் திட்டத்தின் கீழ் பட்டு கூட்டில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களுக்கு ரூ.1.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அலங்கார பூக்கள், மாலை உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்று ஆட்சியர் அழகு மீனா கூறினார்.
Similar News
News April 27, 2025
குமரி மாவட்டத்தில் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஏப்.27) மதியம் 1 மணி வரை மழை நீடிக்கவுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News April 27, 2025
வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெரிகோஸ் நோயால் 91 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற சிறப்பு முகாமில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான முகாமை எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 30 டாக்டர்கள் அடங்கிய குழு அவர்களுக்குபல்வேறு வகையான உடல் தொடர்பான சோதனைகளை மேற்கொண்டது. இந்த முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
News April 27, 2025
தபால் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு ரூ.6ஆயிரம்

6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் இளம் மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக தபால் தலை சேகரிப்பு உதவித்தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். தபால் தலை சேகரித்து வைத்திருக்கும் மாணவர்கள் இதில் பங்கேற்கலாம் என்று கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று தெரிவித்தார். *ஷேர் பண்ணுங்க