News November 23, 2024

குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

image

இன்று உருவாக உள்ள காற்றழுத்து தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை பெறும் வாய்ப்பு உள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதி மற்றும் அரபிக் கடல் பகுதியில் வரும் திங்கட்கிழமை(நவ.,25) முதல் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. இதனால் திங்கட்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Similar News

News July 11, 2025

குமரியில் விஷ ஜந்து கடித்து கொத்தனார் உயிரிழப்பு

image

திருவட்டார் அருகே தச்சக்குடி விளையை சேர்ந்த கொத்தனார் சதீஷ்(37). திருமணமாகாத இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஜூலை.07 தேதியன்று  அருகில் உள்ள வயலில் மயங்கிய நிலையில்
கிடந்தவரை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சதீஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து  திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News July 11, 2025

கன்னியாகுமரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் ஜூலை.26 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 113 நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

News July 11, 2025

குமரியில் சிவில் சப்ளை அலுவலகத்தில் ஆய்வு

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் அமைந்துள்ள சிவில் சப்ளை அலுவலகத்தில் இன்று (ஜூலை.10) தமிழ்நாடு உணவு வழங்கும் துறை ஆணையத்தின் தலைவர் சுரேஷ் ராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள அவருடன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!