News August 26, 2024

குமரி மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கேரள மீனவர்கள்

image

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.

Similar News

News December 5, 2025

குமரி: 10th படித்தால் அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு

image

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14,967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச.4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச.11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 – ரூ.2,09,200 வரை. இந்த நல்ல வாய்ப்பை SHARE செய்யுங்க

News December 5, 2025

குமரி: விருதுக்குவிண்ணப்பிக்க கடைசி தேதி.. கலெக்டர் அறிவிப்பு

image

குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 2025ம் ஆண்டுக்கு தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் தங்களது விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 18-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று பதில் கூறியுள்ளார்.

News December 5, 2025

குமரி: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04652-233213 அணுகலாம். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!