News August 26, 2024

குமரி மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கேரள மீனவர்கள்

image

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.

Similar News

News December 6, 2025

குமரி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 7 இருசக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் இம்மாதம் 9ம் தேதி ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறும் என்று உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

News December 6, 2025

குமரி: தண்டவாளத்தில் தலை வைத்து மாணவர் தற்கொலை

image

தக்கலை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி ரயில் டிரைவர் கொடுத்த தகவல் அடிப்படையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணையில், உயிரிழந்த இளைஞர், வேளாங்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன்(18) என்பதும், அவர் நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை.

News December 6, 2025

குமரி: இன்று எங்கெல்லாம் கரண்ட் கட்?

image

குமரி மாவட்டத்தில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தெங்கம்புதூர், பறக்கை, ஐ.எஸ்.இ.டி., மேலமணக்குடி, முகிலன்விளை, மதுசூதனபுரம், புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பொட்டல், வெள்ளாளன்விளை, பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை, ராஜாக்கமங்கலம், ஆலன்கோட்டை, பருத்திவிளை, காக்காதோப்பு, ஆலுவிளை, மருதங்கோடு, புலியூர்சாலை, அருமனை, பளுகல், களியக்காவிளை, விளவங்கோடு, கழுவன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள். SHARE

error: Content is protected !!