News August 14, 2024
குமரி மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் முதல்வர் விருதுக்கு தேர்வு

சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் விருதுக்கு குமரி மாவட்ட பெண் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர்
கடந்த 2004ஆம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 6, 2025
குமரி: ஆயுதப்படை வளாகத்தில் முதிர்ந்த மரங்களை அகற்ற ஏலம்

குமரி காவல்துறை இன்று 06.12.2025 வெளியிட்ட செய்தி குறிப்பில் குமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இடையூறாக மற்றும் முதிர்வுற்ற 19 மரங்களை வெட்டி அகற்ற நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் டிசம்பர் 10ம் தேதி காலை 9 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள ரூ.1000 கட்டி பெயர்களை பதிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 6, 2025
குமரி: பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம்

நாகர்கோவில் அருள்மிகு தழுவிய மகாதேவர் ஆலய தெப்பக்குளத்தை சீர் செய்ய நிதி இல்லை என காரணம் கூறிய அறநிலைய துறையை கண்டித்து நாகர்கோவில் வடக்கு மண்டல பாஜக சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் கோவில் வளாகத்தில் இன்று (டிச-6) நடைபெற்றது. வடக்கு மண்டல பாஜக தலைவர் சுனில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
News December 6, 2025
குமரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

குமரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <


