News August 14, 2024
குமரி மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் முதல்வர் விருதுக்கு தேர்வு

சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் விருதுக்கு குமரி மாவட்ட பெண் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர்
கடந்த 2004ஆம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 11, 2025
குமரி: பைக் மோதி மூதாட்டி பலி

ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (70). இவர் ராமன் புதூர் மீன் சந்தையில் மீன் வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக ரோட்டை கடக்கும் போது அந்த வழியாக சென்ற பைக் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ஞானம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று (டிச.10) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 11, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் கடையால், அருமனை பேரூராட்சிகள் மற்றும் வெள்ளாங்கோடு, மாங்கோடு, மஞ்சாலுமூடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் களியல் செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் டிச.13 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
குமரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


