News March 16, 2025
குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

#குமரியில் இன்று(மார்ச் 16) பிற்பகல் 2 மணிக்கு கல்வி மற்றும் கலை துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வடசேரியில் பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேஷன் சார்பில் விருது வழங்கும் விழா நடக்கிறது.#பிற்பகல் 2.30 மணிக்கு தெற்குச் சூரங்குடியில் கலைஞர் நூற்றாண்டு விழா மாட்டு வண்டி போட்டி நடக்கிறது.#மாலை 6 மணிக்கு தேவ சகாயம் மூன்று காற்றாடி மலை புனித வியாகுல அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பரம் பவனி நடக்கிறது.
Similar News
News March 17, 2025
குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

#குமரியில் இன்று(மார்ச் 17) காலை 9 மணிக்கு அரசு ரப்பர் தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி 96வது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு தேசிய ஊரகத் தொழிலாளர்களுக்கான ஐந்து மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
News March 17, 2025
சட்ட விரோதமாக பணியாற்றிய வங்கதேசத்தவர் கைது

குமரி அருகே இடைக்கோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இங்கு வங்காளதேசத்தை சேர்ந்த சித்திக்(32 ) என்ற இளைஞர் போலி ஆவணங்களுடன் சட்ட விரோதமாக பணிபுரிந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, ஆவணங்களை ஆய்வு செய்தனர். அவரிடம் இருந்த ஆவணத்தில் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்.
News March 16, 2025
குமரியில் வேலை வாய்ப்பு முகாம்!

வசந்த் அண்ட் கோ சார்பில் ஒவ்வொரு வருடமும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் வரும் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இளைஞர்கள் இதில் ஏராளமாக பங்கேற்று பயனடைய வேண்டும் என வசந்த் அண்ட் கோ தலைவர் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.