News March 27, 2025
குமரி போலீஸ் அதிரடி – 4 நாளில் 20 ரவுடிகள் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டேஷன் வாரியாக ரவுடிகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அதில் A,B,C பிரிவுகளில் இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த 4 நாளில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என எஸ்பி ஸ்டாலின் நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
Similar News
News January 3, 2026
குமரி: பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்..

பொங்கல் பண்டிகை இம்மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி பொதுமக்கள் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,11 (ம) 18-ஆம் தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து ஜன.,12 மற்றும் 19-ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதைப்போல் கன்னியாகுமரியில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,13, 20 தேதிகளிலும், தாம்பரத்திலிருந்து குமரிக்கு ஜன.,14, 21 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
News January 3, 2026
குமரி: கார் கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு…

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று (ஜன.3) அதிகாலை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
News January 3, 2026
குமரி: ஆன்லைன் பண மோசடியால் வங்கி கணக்குகள் முடக்கம்..

குமரியில் பண மோசடி தொடர்பாக 2,89,83,656 ரூபாய் மோசடி நபர்களின் வங்கி கணக்குகள் சைபர் கிரைம் போலீசாரால் முடக்கப்பட்டுள்ளது. அதில் 1,53,29,516 ரூபாய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் பொது அமைதியை கெடுக்கும் வகையில் அவதூறு பரப்புவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குமரி காவல்துறை தெரிவித்துள்ளது.


