News March 27, 2025
குமரி போலீஸ் அதிரடி – 4 நாளில் 20 ரவுடிகள் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டேஷன் வாரியாக ரவுடிகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அதில் A,B,C பிரிவுகளில் இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த 4 நாளில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என எஸ்பி ஸ்டாலின் நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
குமரியில் மழைச் சேதத்தை தடுக்க தயார் நிலை – மேயர் பேட்டி

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது; நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் மழை சேதங்களை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவையான ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கடந்து சில மாதங்களுக்கு முன்பே இருந்து கால்வாய் நிகழ்ச்சி சீரமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது என்றார்.
News November 17, 2025
குமரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

கன்னியாகுமரி மக்களே; வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். மீறினால் கன்னியாகுமரி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000482, 9445000483 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News November 17, 2025
குமரி: B.E/B.Tech படித்தவர்களுக்கு ரூ.50,000 சம்பளம்

குமரி மக்களே; இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <


