News March 27, 2025

குமரி போலீஸ் அதிரடி – 4 நாளில் 20 ரவுடிகள் கைது!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டேஷன் வாரியாக ரவுடிகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அதில் A,B,C பிரிவுகளில் இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த 4 நாளில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என எஸ்பி ஸ்டாலின் நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.

Similar News

News December 2, 2025

குமரி: மாணவி பாலியல் வன்கொடுமை.. டிரைவர் கைது

image

தக்கலை பகுதியை கல்லூரி மாணவி கடந்த 9ம் தேதி ஆம்னி பேருந்தில் கல்லூரிக்கு கோயம்புத்தூர் சென்றுள்ளார். அப்போது அவரிடம் உதவி செய்வது போன்று களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுனர் அனீஷ் (36) என்பவர் மயக்க பிஸ்கட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுக்குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் அனிஷை நேற்று கைது செய்தனர்.

News December 2, 2025

நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்

image

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றும் (டிச.2) நாளையும் (டிச.3) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்தில் மற்றம் செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முழு போக்குவரத்து மாற்றம் பற்றி அறிய <>இங்கு கிளிக்<<>> செய்யவும்.

News December 1, 2025

குமரி: மீன்பிடி உரிமம் ஏலம் அறிவிப்பு

image

பேச்சிப்பாறை அணை மீன்பிடி உரிமம் தொடர்பான ஏல அறிவிப்பு, ஏல நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை www.tntendersgov.in என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம். மேலும் இந்த இணையவழி ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவர்கள் ஒப்பந்தப்புள்ளி படிவம் மற்றும் இதர படிவங்களை மேற்குறிப்பிடப்பட்ட இணையதளத்தில் 19494/F3/2024 என்ற ஏல அறிவிப்பு எண்ணினை உள்ளீடு செய்து கட்டணமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!