News March 28, 2025

குமரி பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

image

குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை இத்திட்டத்தில் 13,000 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என கூறியுள்ளார். *நல்ல வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க* ஷேர்

Similar News

News September 18, 2025

7524 மனுக்களுக்கு இதுவரை தீர்வு – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 16.09.2025 வரை 210 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு 1,05,305 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட 7524 மனுக்களுக்கு இதுவரையிலும் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி

image

காஞ்சான்காடு பகுதியை சேர்ந்த பிரவின் ஜோஸ் உட்பட 6 பேர்    சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திருவனந்தபுரம் தனியார் டிராவல் ஏஜென்சியிடம் ரூ3,36,400 அளித்துள்ளனர். ஒரு ஆண்டுகளாகியும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாததால் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின்தாஸ் உட்பட 2 பேர் மீது  வழக்கு தொடரப்பட்டது. அதில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் களியக்காவிளையில் அகஸ்டின் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 17, 2025

குமரி: தரச்சான்று கட்டணம் குறைவு

image

குமரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தினமும்    பயன்படுத்தும் அரிசி, தேன், மசாலா பொருட்கள்,எண்ணெய் உட்பட 248  வகை அத்தியாவசிய பொருட்களில் கலப்படத்தை தவிர்க்கும் பொருட்டு அக்மார்க் தரச்சான்று பெற்று உற்பத்தியாளர்கள் விற்பனை செய்கின்றனர்.  தற்போது அக்மார்க் தரச்சான்று பெற பதிவுக்கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500 ஆக குறைக்கபட்டுள்ளது. அக்மார்க் தரச்சான்று கட்டாயம் ஆகும். 

error: Content is protected !!