News March 28, 2025
குமரி பெண் பிள்ளைகளின் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

குமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ஆண்டுக்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கும் மகளிர் மதிப்பு சேமிப்பு திட்டம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை இத்திட்டத்தில் 13,000 பேர் கணக்கு தொடங்கியுள்ளனர். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என கூறியுள்ளார். *நல்ல வாய்பை மிஸ் பண்ணிடாதீங்க* ஷேர்
Similar News
News November 2, 2025
கன்னியாகுமரியில் ரூ.21.95 கோடியில் ராஜகோபுரம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 2, 2025
குமரி பகவதி அம்மன் கோவிலுக்கு 22 கோடியில் ராஜகோபுரம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு ₹21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 2, 2025
குமரியில் வெற்றிப் பாதை பயிற்சி தேர்வு அறிவிப்பு

குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலினின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு 3 நாளை (நவ.2) மாவட்ட ஆயுதப் படையில் நடைபெறும். இதில் தேர்வுக்கு தகுதி உள்ள அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9.00 மணிக்கு நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படையில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


