News August 13, 2024
குமரி பிற்படுத்தப்பட்டோர் கவனத்திற்கு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, மேற்கண்ட இன மக்களை 10 நபர்கள் கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைத்திட தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு அரசு ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.
Similar News
News May 7, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.
News May 7, 2025
குமரி மாவட்ட அரசு போக்குவரத்து அலுவலர்கள் எண்கள்

பொது மேலாளர் -9487599081
துணை மேலாளர் (வணிகம்) -9487599082
கோட்ட மேலாளர் (நாகர்) -9487599083
கிளை மேலாளர்:
இராணித்தோட்டம் 1 -9487599084
இராணித்தோட்டம் 2 -9487599085
இராணித்தோட்டம் 3 -9487599086
கன்னியாகுமரி -9487599087
விவேகானந்தபுரம் -9487599088
குழித்துறை -9487599089
திருவட்டார் -9487599090
திங்கள் நகர் -9487599091
மார்த்தாண்டம் -9487599092
குளச்சல் -9487599093
News April 30, 2025
மாணவியிடம் நகை பறித்த பெண்கள்; 4 பேர் கைது

புதுக்கடை அருகே தும்பாலி, ஆத்திவிளை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி தையல் பயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மாணவியைப் பிடித்து தாக்கி அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து சக்தி, சந்தோஷ், மஞ்சுளா, வளையாபதி ஆகிய 4 பேரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.