News May 17, 2024

குமரி; தயார் நிலையில் மீட்பு படை

image

குமி மாட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தொடர்ந்து அணைகள் நிரம்பி வெள்ள பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News October 23, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.30 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

உழவரைத் தேடி வேளாண்மை முகாம் அறிவிப்பு

image

உழவரை தேடி வேளாண்மை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் 4 வருவாய் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 24.10.2025 அன்று செண்பகராமன்புதுார், வெள்ளிசந்தை. ஆற்றூர் ஆகிய 3 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும், குமாரபுரம், சைமன் காலனி ஆகிய 2 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் நடைமுறை இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News October 22, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

image

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக். 22) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 41.74அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.55 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 6.99 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 7.08 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 546 கனஅடி, பெருஞ்சாணிக்கு 511 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

error: Content is protected !!