News March 21, 2024
குமரி: கோவில் பூஜையில் கலந்து கொண்ட மேயர்

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News December 11, 2025
குமரி மாவட்டத்தில் புதிதாக 212 வாக்குச்சாவடிகள் அமைப்பு

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 212 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் 1702 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனுடன் சேர்த்து மாவட்டத்தில் தற்போது 1914 வாக்குச்சாவடிகள் உள்ளன.
News December 11, 2025
குமரி: EB கட்டணம் அதிகமா வருதா?

குமரி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.
News December 11, 2025
குமரி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <


