News March 21, 2024
குமரி: கோவில் பூஜையில் கலந்து கொண்ட மேயர்

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News October 19, 2025
குமரியில் முன்னாள் அமைச்சர் உட்பட 25 பேர் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை பஸ் நிலையத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்குவதாக காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்டது. அதில் பொதுமக்களுக்கு இடையூறாக தெருமுனை பிரச்சாரம் செய்ததாகவும், காவல்துறை கலைந்து போக கூறியும் போகாததால் முன்னாள் அமைச்சர் பச்சைமால் உட்பட 25 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
News October 19, 2025
குமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

குமரி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News October 19, 2025
குமரியில் சூரிய உதயம் தெரியவில்லை

சுற்றுலா மயமான கன்னியாகுமரிக்கு இன்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கன்னியாகுமரியில் மழை பெய்து கொண்டிருந்ததால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே கடற்கரைக்கு வந்திருந்தனர். மழை காரணமாக கடலில் சூரிய உதயம் இன்று தெரியவில்லை. இதனால் சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.