News January 22, 2025
குமரி காவல்துறை சார்பில் ஏலம் அறிவிப்பு

குமரி மாவட்ட காவல் துறை தொலைத்தொடர்பு பிரிவில் கழிவு செய்யப்பட்ட 197 மின்கலன்கள் (Batteries) உட்பட 1205 பொருட்கள் பொது ஏலத்தில் 06.02.2025 அன்று விடப்படுகிறது. மத்திய மாநில அரசுகளிடமிருந்து வழங்கப்பட்ட current Air pollution, water pollution certificates மற்றும் உரிமம் பெற்றவர்கள் மட்டும் அசல் உரிமத்தை காண்பித்து மின்கலன்களை ஏலம் எடுப்பதில் பங்கு பெறலாம் என மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது
Similar News
News October 19, 2025
குமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

குமரி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News October 19, 2025
குமரியில் சூரிய உதயம் தெரியவில்லை

சுற்றுலா மயமான கன்னியாகுமரிக்கு இன்று விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். கன்னியாகுமரியில் மழை பெய்து கொண்டிருந்ததால் குறைந்த அளவு சுற்றுலா பயணிகளே கடற்கரைக்கு வந்திருந்தனர். மழை காரணமாக கடலில் சூரிய உதயம் இன்று தெரியவில்லை. இதனால் சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
News October 19, 2025
நலன் காக்கும் ஸ்டாலின் முகாமில் 18,244 பேர் பயன்

நேற்று (அக்.18) மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்ததாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நலன் காக்கும் ஸ்டாலின் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 10 முகாம்கள் நடந்துள்ளது. 17 உயர் சிகிச்சை பிரிவு டாக்டர்கள் மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். 5,430 ஆண்,12,814 பெண் என மொத்தம் 18,244 பேர் பயனடைதுள்ளனர். பொதுமக்கள் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறவேண்டும் என்றார்.