News March 27, 2025
குமரி கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 20 வினாடிகளுக்கு ஒருமுறை 0.8 முதல் 0.9 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. எனவே இன்று(27ஆம் தேதி)அலைகளின் தாக்கம் காணப்படும் என்பதால் கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய கடல் சார் சேவை மையம் நேற்று தெரிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
குமரி: போலி ரசீது வழங்கி 46 லட்சம் மோசடி

தேங்காய் பட்டினத்தில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் பணியாற்றிய மேலாளர் ஒருவர் தங்க நகைகள் அடகு வைக்க வரும் நபர்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து போலி ரசீதுகள் வழங்கியுள்ளார். அந்த வகையில் 46 லட்சத்து 8938 ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து மண்டல மேலாளர் கொடுத்த புகாரின் பெயரில் புதுக்கடை போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை.
News December 1, 2025
குமரி : இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 1, 2025
குமரியில் இரண்டு மாதத்தில் இவ்வளவு மழை பதிவா??

கன்னியாகுமரி மாவட்டத்தில் காணுங்க இரண்டு மாதங்களில் வடகிழக்கு பருவமழை 450 மில்லி மீட்டர் பெய்துள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 469 மில்லி மீட்டர் ஆகும். வழக்கமாக பெய்யும் மழையை விட மழை குறைவாகவே பெய்துள்ளது.இந்த இரண்டு மாதங்களில் நவம்பர் மாதம் அதிக மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


