News September 15, 2024
குமரி: இன்வெட்டர் பாக்ஸில் பதுங்கிய கட்டுவிரியன்

குமரி மாவட்டம் லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் வீட்டில் பாம்பு ஒன்று புகுந்து இன்வெட்டர் பாக்ஸில் பதுங்கியுள்ளது. அவர் குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பு 5-அடி நீள கட்டு விரியன் வகை என கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து பாம்பை லாவகமாக பிடித்த வீரர்கள் பாம்பை சாக்கு மூட்டையில் அடைத்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர்.
Similar News
News December 5, 2025
குமரி: நாளை எங்கெல்லாம் மின்தடை?

குமரி மாவட்ட துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளை (டிச.6) நடக்கிறது. எனவே, காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, மலையடி. பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, விளவங்கோடு, கழுவன் திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதி மற்றும் கிராம பகுதியிலும் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
News December 4, 2025
குமரி: டிரைவரை தாக்கி 10 பவுன் நகை பறிப்பு

புதுக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி. டிரைவரான இவர் தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் முன் விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி அவரது கையில் அணிந்திருந்த ஐந்து பவுன் பிரைஸ் லெட், கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 4, 2025
குமரி: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

குமரி மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். <


