News August 16, 2024
குமரி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Similar News
News November 13, 2025
குமரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY!

குமரி மக்களே முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு 18,000 வழங்கப்படுகிறது. இங்கு <
1.ஆதார் அட்டை
2.வீட்டு பில், வாக்காளர் அட்டை
3.மருத்துவசான்றிதழ்
4.பாஸ்போர்ட் புகைப்படம்
5.பிறப்பு சான்றிதழ் (தாய்)
இந்த ஆவணங்களை சமர்பித்து ரூ. 18,000/- சுலபமாக பெறலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News November 13, 2025
குமரி மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகளுக்கு விருது

தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் 2004 – 2021 ஆண்டுக்கான சிறந்த பள்ளிகளாக குமரி மாவட்டத்தில் ஆலங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி, ஈத்தாமொழி அரசு தொடக்கப்பள்ளி, கடியப்பட்டணம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நாளை (நவ.14) காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேடயம் வழங்குகிறார்.
News November 13, 2025
கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்

கோவில் நகரமான கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இது வருகிற டிச-7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி புறப்பட்டு செல்கிறது. 13ம் தேதி வாரணாசியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.


