News August 16, 2024

குமரி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

image

“மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் என அனைத்து இடங்களிலும் உள்ள பேருந்து நிலையங்களை அலுவலர்கள் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களில் உள்ள பாசிகளை அகற்றி பெயிண்டிங் செய்ய வேண்டும். முக்கியமான அலுவலக பணிகளை தவிர்த்து காலை முதல் மதியம் வரை மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 27, 2025

குமரி: கணவர் அடித்தால் CALL பண்ணுங்க!

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளை நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

News November 27, 2025

குமரி: 8-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

image

களியக்காவிளை அருகே காரக்கோணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு வந்த நிலையில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வெள்ளறடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

News November 27, 2025

நீர்வளத்துறை அலுவலகத்தில் மரங்கள் ஏலம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் செருப்பலூர் கிராமத்தில் நீர்வளத்துறை அலுவலகத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மரங்கள் குறித்த ஏல அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தேக்கு மரம் 33, அயனி மரம் 3, பலாமரம் 2, மாமரம் 7, புளிய மரம் 2, வாதுமை மரம் 1 மற்றும் வாகை மரம் 1 ஆகியவை ஏலம் விடப்பட இருக்கிறது. ஏலம் டிச. 9 அன்று நடைபெற உள்ள நிலையில் விருப்பமுள்ளவர்கள் டிச.8 க்குள் பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!