News August 16, 2024
குமரி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

“மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகள் என அனைத்து இடங்களிலும் உள்ள பேருந்து நிலையங்களை அலுவலர்கள் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து, பஸ் நிறுத்தங்களில் உள்ள பாசிகளை அகற்றி பெயிண்டிங் செய்ய வேண்டும். முக்கியமான அலுவலக பணிகளை தவிர்த்து காலை முதல் மதியம் வரை மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களும் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
BREAKING குமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. SHARE IT
News November 28, 2025
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் இடமாற்றம்

குமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(வளர்ச்சி) பணியாற்றி வந்த சுசிலா பீட்டர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் பழனிவேல் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் 47 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.


