News December 4, 2024
குமரி அணைகளுக்கு வரும் நீர் வரத்து இன்றைய விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 350 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 365 பெருஞ்சாணி அணையில் இருந்து 510 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 325 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News November 27, 2025
நாகர்கோவில்: தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பு துப்பரவு தொழிலாளி பால்ராஜ் என்பவரை குடி போதையில் அடித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஒரு ஆண்டுகாலமாக குற்றவாளியை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று (நவ.27) திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 27, 2025
குமரி: மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

குமரி மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News November 27, 2025
குமரியில் SIR படிவங்கள்.. கலெக்டர் புது தகவல்

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் 15,61,354 கணக்கிட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவரையிலும் 12,37,466 கணக்கிட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 77.69 சதவீதம் ஆகும்.


