News November 25, 2024
குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை 292 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 610 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 422 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
Similar News
News December 18, 2025
குமரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News December 18, 2025
குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி!

திருவனந்தபுரம் கல்லடச்சான்மூலை பகுதியை சேர்ந்தவர் சந்திரன்(69). இவர் கடந்த டிச.6.ம் தேதி பைக்கில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு பைக்கில் சென்று விட்டு கொல்லங்கோடு வழியாக வரும்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சந்திரன் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
News December 18, 2025
குமரி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

முளகுமூடு கல்லுவிளை பெயிண்டர் லிபின். இவர் டிச.16.ம் தேதி குளச்சல் துறைமுகத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிபினின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


