News November 25, 2024

குமரி அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்தது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை 292 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 169 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 501 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 610 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 422 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Similar News

News January 11, 2026

குமரி: டெம்போ மோதி போலீஸ் ஏட்டு பலி..!

image

நாகர்கோவில் கிறிஸ்து நகரை சேர்ந்தவர் யூஜின் கிராஸ். மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். ஜன.4 அன்று சாலையில் நடை பயிற்சியில் இருந்தபோது பின்னால் வந்த டெம்போ இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த யூஜின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.10) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

குமரி: திருமணம் ஆகாத விரக்தியில் பெண் தற்கொலை

image

நாகர்கோவில் அருகே கோதை கிராமத்தை சேர்ந்தவர் 33வயது பெண். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஏக்கத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று (ஜன.10) காலை அவரது பெற்றோர் இதை பார்த்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோட்டார் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். (தற்கொலை தடுப்பு உதவி எண்: 104)

News January 10, 2026

குமரி: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

குமரி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!